search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரங்கம்பாடி அருகே லாரி மோதி வாலிபர் பலி
    X

    தரங்கம்பாடி அருகே லாரி மோதி வாலிபர் பலி

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே லாரி மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே திருக்கடையூர் சின்னகுடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன் நந்திஷ் (வயது 19).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சின்னகுடியில் இருந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் நடந்த பால வேலைக்காக வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட நந்திஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பொறையாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×