என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த மணப்பெண் திடீர் மாயம்
கடையம்:
நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பார்வதிநாதன். இவரது மகள் ஜான்சி (வயது 22). இவர் தென்காசி அருகேயுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும் கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி மயிலானூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இன்று கடையத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் அவர்களது திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இரு வீட்டாரும் திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கினர்.
திருமணத்திற்கு மணமகன் வீட்டார் இன்று காலை கடையத்துக்கு புறப்பட்டு நின்றனர். மணமகளை அலங்காரம் செய்வதற்காக உறவினர்கள் மணப்பெண்ணை கூப்பிட சென்றனர். அப்போது மணப்பெண் ஜான்சியை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் திருமண வீட்டாரும், அங்கு வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண வீடு களை இழந்தது. இது குறித்து கடையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜான்சி எங்கு சென்றார்? திருமணம் பிடிக்காமல் சென்றாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்