search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயிலில் அடிக்கடி சிக்னல் கோளாறு
    X

    மெட்ரோ ரெயிலில் அடிக்கடி சிக்னல் கோளாறு

    மெட்ரோ ரெயில் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே வாரத்தில் 2 முறை சேவை பாதிக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடியாக பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். #Metrotrain
    சென்னை:

    மெட்ரோ ரெயிலில் அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு 2 முறை பயணிகள் சேவை 20 நிமிடங்கள் பாதிப்படைந்துள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.

    கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும் திருமங்கலம்-சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ்.வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பொதுமக்கள் - பயணிகள் இடையே வரவேற்பு ஏற்பட்டதையொட்டி மெட்ரோ ரெயில் திட்டம் சென்னை மாநகரம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பாதையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே வாரத்தில் 2 முறை பயணிகள் சேவை பாதிக்கப்பட்டது. 20 முதல் 25 நிமிடங்கள் வரை போக்குவரத்து சேவை முடங்கியது.

    கடந்த 8-ந்தேதி அன்று 30 நிமிடங்களும் நேற்று (11-ந்தேதி) 25 நிமிடங்களும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்படைந்துள்ளது. இதனால் பயணிகள், பொதுமக்கள் தவித்தனர்.

    இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மாநகரத்தில் மெட்ரோ ரெயில் சேவை பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. ஒரே வாரத்தில் 2 முறை சிக்னல் கோளாறால் பயணிகள் சேவையில் பாதிப்பு என்பது அதிர்ச்சியை தருகிறது. இதனால் மெட்ரோ ரெயில் மீது நம்பகத்தன்மை குறைந்து விடும். எனவே அதிகாரிகள் உடனடியாக இது போல் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Metrotrain

    Next Story
    ×