
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது அணியாப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாரத ரத்னா வேண்டுமா? பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கலைஞருக்கு தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டி நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் விலை குறைக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin