search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி கைது
    X

    கொலை வழக்கில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி கைது

    திருச்சியில் 20 கொலை வழக்கில் 20 வருடங்களாக தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த செந்தில் குமார் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இதில்19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான செல்வம் 20 வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நாமக்கலில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். #tamilnews
    Next Story
    ×