search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்திய லாரி பறிமுதல் - டிரைவர் கைது
    X

    மணல் கடத்திய லாரி பறிமுதல் - டிரைவர் கைது

    அன்னவாசல் அருகே அனுமதி இன்றி மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    அன்னவாசல்:

    அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் குடுமியான்மலையை அடுத்த அண்ணாபண்ணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து, அதனை ஓட்டி வந்த டிரைவர் கன்னியாகுமரியை சேர்ந்த சுசீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×