search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேர் கைது
    X

    காரைக்குடி பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த 2 பேர் கைது

    காரைக்குடி பகுதியில் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள திருச்சி பைபாஸ் சாலையில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை போலீசார் சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று நேமத்தான்பட்டி பகுதியில் செட்டிநாடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற காளையார்கோவிலை சேர்ந்த திருவளர்செல்வன் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வடக்காத்தான்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் நேமத்தான்பட்டி வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைதுசெய்து, லாரியை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×