search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறிப்பு
    X

    வத்தலக்குண்டு அருகே நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறிப்பு

    வத்தலக்குண்டுவில் நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறித்த நபர்களை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டுவை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஜாபர்சாதிக். இவர் நேற்றுமாலை திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். ஸ்டேட்பாங்க் காலனி அருகே செல்போனில் பேசியபடி சென்றபோது பின்னால் வந்த 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்போனை பறித்துக்கொண்டு ஓடினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாபர்சாதிக் அங்கிருந்த நண்பர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அவர்களை விரட்டினார். மேலும் வத்தலக்குண்டு போலீசாருக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கொள்ளையர்களை விரட்டி வந்தனர். பட்டிவீரன்பட்டி குறுக்கு ரோடு பகுதியில் கன்னிமார்கோவில் அருகே செல்போன் பறித்து சென்ற 2 பேரையும் மடக்கிபிடித்தனர்.

    பின்னர் அவர்கள் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைநடத்தினர். விசாரணையில் அவர்கள் பெரும்பாறையை சேர்ந்த விஜய்(25), மணிமுத்து(21) என தெரியவரவே அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    Next Story
    ×