search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி- இருக்கையிலேயே உயிர் இழந்தார்
    X

    சேலத்தில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சுவலி- இருக்கையிலேயே உயிர் இழந்தார்

    சேலத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற பஸ்சில் டிரைவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு இறக்கையிலேயே இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஏ.கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசுந்தரரானாந்த (வயது 38). இவர் விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு பஸ் புறப்பட்டது. சேலம் பொன்னம்மாபேட்டை அருகில் சென்றபோது திடீரென்று டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தவாறே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து கண்டக்டர் அம்மாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனே அங்கு சென்று டிரைவர் கிருஷ்ணா உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இவருக்கு மதுகாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×