என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் மனைவி மர்ம மரணம்
Byமாலை மலர்11 Sep 2018 11:48 AM GMT (Updated: 11 Sep 2018 11:48 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பா.ம.க. நிர்வாகியின் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பா.ம.க. நிர்வாகி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை புஷ்பராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஜெயசங்கருக்கு தொலைபேசி மூலம் ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு உளுந்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு வீட்டில் புஷ்பராணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். புஷ்பராணி வீட்டு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
மகளின் சாவுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் தந்தை ஜெயசங்கர் புகார் செய்தார்.
அதில் எனது மகள் புஷ்பராணி சாவில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புஷ்பராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
புஷ்பராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். பா.ம.க. நிர்வாகி. இவரது மனைவி புஷ்பராணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை புஷ்பராணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ஜெயசங்கருக்கு தொலைபேசி மூலம் ஊர் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயசங்கர் மற்றும் அவரது உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு உளுந்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு வீட்டில் புஷ்பராணி பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். புஷ்பராணி வீட்டு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
மகளின் சாவுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் தந்தை ஜெயசங்கர் புகார் செய்தார்.
அதில் எனது மகள் புஷ்பராணி சாவில் சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, சப்- இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். புஷ்பராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
புஷ்பராணி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்த பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X