search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு அருகே சிறுமியை கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    X

    செய்யாறு அருகே சிறுமியை கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    செய்யாறு அருகே சிறுமியை கற்பழித்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பில்லாந்திபட்டு பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 35). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்தகாரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் பயந்து போன சிறுமி நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதைனை பயன்படுத்திக் கொண்ட விநாயகம் தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    இதனால் சிறுமி 7 மாதம் கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் செய்யாறு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×