search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
    X

    காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

    காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    காவேரிபட்டிணம்:

    காவேரிபட்டிணம் அடுத்த மலையாண்டள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது40). இவரது மனைவி வனிதா (வயது30) மற்றும் இவர்களது மகன் ராஜேஷ் கன்னா (வயது 14).

    இவர் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டு மாலை 4 மணியளவில் போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு தனது இருசக்கர மோட்டர் சைக்கிளில் திரும்பினார். அப்போது அவர் மலையாண்டள்ளி காலனி அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து (டவுன்பஸ்) எதிர்பாராத விதமாக இருசக்கர மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் கோவிந்தசாமி உயிர் இழந்தார்.

    பின்னர் பிரேதத்தை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×