என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
காவேரிபட்டிணம்:
காவேரிபட்டிணம் அடுத்த மலையாண்டள்ளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது40). இவரது மனைவி வனிதா (வயது30) மற்றும் இவர்களது மகன் ராஜேஷ் கன்னா (வயது 14).
இவர் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிவிட்டு மாலை 4 மணியளவில் போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணத்திற்கு தனது இருசக்கர மோட்டர் சைக்கிளில் திரும்பினார். அப்போது அவர் மலையாண்டள்ளி காலனி அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து (டவுன்பஸ்) எதிர்பாராத விதமாக இருசக்கர மோட்டர் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் கோவிந்தசாமி உயிர் இழந்தார்.
பின்னர் பிரேதத்தை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்