search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொட்டுப்பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    கொட்டுப்பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி குழு சார்பில் கொக்கு பார்க் அரசு அச்சகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, எழிலன், துணை செயலாளர் செல்வம், பொருளாளர் தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், நிர்வாக குழு உறுப்பினர் சேது செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர் ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர்கள் தென்னரசன், லோகு, ரவிச் சந்திரன், வெங்கடேசன், சிலம்பரசன் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    வீட்டு வரி சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும். குப்பை வரியை நீக்க வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். தொகுதியில் எரியாத மின் விளக்குகளை எரிய செய்ய வேண்டும். சாலை வசதி, கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரவேண்டும்.

    பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் சட்டமன்றத்தில் அறிவித்தபடி கிழக்கு கடற்கரை சாலை கொட்டுப் பாளையத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. #tamilnews
    Next Story
    ×