என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே விவசாயி தற்கொலை
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினம் மருதூர்வடக்கு மச்சக்கன்னி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 65). விவசாயி. இவரது மனைவி சவுந்தரலட்சுமி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் வயதான காலத்தில் குழந்தை இல்லாததால் கஷ்டப் படுகிறமோ? என்று தங்கராசு நினைத்து மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டில் இருந்த தங்கராசு, தனக்கு பின் வாரிசு இல்லையே என்று ஏக்கத்தில் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தங்கராசு பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கரியாபட்டினம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்