search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பந்த்’ போராட்டத்திற்கு எதிராக தலையீடு- கவர்னர் கிரண்பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம்
    X

    ‘பந்த்’ போராட்டத்திற்கு எதிராக தலையீடு- கவர்னர் கிரண்பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம்

    முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடிக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #KiranBedi
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா ஆட்சி நாட்டு மக்கள் தலையில் பெரிய பொருளாதார சுமையை சுமத்தி இருக்கிறது. தாங்க முடியாத அளவில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை அறிவித்து இருக்கிறது.

    ஜனநாயக பாதையை விட்டு விட்டு எதேச்சதிகார, சர்வதிகார ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களுடைய வாழ்க்கையை சீரழித்து விட்ட 4ஆண்டு கால மோடியின் சீர்கெட்ட ஆட்சியை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆதரவு அளித்த வணிக பெருமக்கள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிராக அரசு நிர்வாகத்தை தலையீடு செய்த கவர்னர் கிரண் பேடியின் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

    மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளின் இருந்த மீள்வதற்கு, மக்களே இந்த முழு அமைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து மோடி ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். #KiranBedi
    Next Story
    ×