search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூரில் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    அரகண்டநல்லூர் பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவரும், கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை தாங்கினார்.

    ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆ.சா.ஏ.பிரபு, நகர தி.மு.க செயலாளர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி தொழில் அதிபர் எம்.எஸ்.கே.அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சாதுல்லாகான் அனைவரையும் வரவேற்றார். ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பால.பத்மநாபன், தாயுமானவர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுசெயலாளர் தஸ்தகீர், மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ரியாசுதீன், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் சேகர், நகர நிர்வாகி அயோத்தி, திருக்கோவிலூர் வட்டார தலைவர் தனசேகர், மணம்பூண்டி வட்டார தலைவர் பாவாடை, வட்டார துணைத்தலைவர்கள் வெள்ளியங்கிரி, ரவி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரவி, ஒன்றிய தி.மு.க அவைத்தலைவர் முருகதாஸ், ஒன்றிய துணை செயலாளர் ஜெய்சங்கர், சரவணகாசன், குணசேகர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தி.மு.க மாவட்ட பிரதிநிதி ராஜ்மோகன் நன்றி கூறினார்.

    தொடர்ந்து திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் உள்ள காந்தி சிலை முன்பும் மாநில துணைத்தலைவர் வாசிம்ராஜா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×