search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாம்பலத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி கடத்தல் - 3 பேர் கைது
    X

    மாம்பலத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி கடத்தல் - 3 பேர் கைது

    மாம்பலத்தில் ஐஸ்கிரீம் வியாபாரி கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    சென்னை:

    சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முனியசாமி. தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று துரைசாமி பாலம் அருகில் வியாபாரத்தில் ஈடுபட்ட போது காரில் வந்த 4 பேர் அவரை கடத்தி சென்றனர். அப்போது அவர் சத்தம் போட்டார். இதையடுத்து ரோந்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக மாரிமுத்து, ராஜ்சுந்தர், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் வந்த சுதாகர் என்பவர் கடத்தப்பட்ட முனியசாமியிடம் ஐஸ்கிரீம் கேட்டபோது ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தல் சம்பவம் நடந்தது தெரிய வந்தது. #arrest

    Next Story
    ×