search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் பலி
    X

    கொடிவேரி அணையில் மூழ்கி வாலிபர் பலி

    கொடிவேரி அணையில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். இவரது மகன் லூர்து ஆண்ட்ரூஸ்.

    லூர்து ஆண்ட்ரூஸ் மற்றும் அவரது நண்பர்கள் நேற்று மோட்டார் சைக்கிள்களில் சுற்றுலா சென்றனர். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையை பார்க்க வந்தனர்.

    அணையில் தண்ணீர் கொட்டியபடி பாய்ந்து சென்று கொண்டிருந்ததை கண்ட அவர்களுக்கு அதில் குளிக்க ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கொடிவேரி அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது லூர்து ஆண்ட்ரூஸ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

    அவரது நண்பர்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

    இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு அவரது உடலை பார்த்து அழுதபடி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×