என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரி அருகே லாரி மீது தனியார் பஸ் மோதல்- 8 பயணிகள் காயம்
Byமாலை மலர்10 Sep 2018 4:37 PM GMT (Updated: 10 Sep 2018 4:37 PM GMT)
தருமபுரி அருகே இன்று காலை லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இன்று காலை தருமபுரியை அடுத்த செல்லியம்பட்டி அருகே அந்த பஸ் சென்றுகொண்டிருந்தது.
இந்த பஸ்சை டிரைவர் சேகர் இயக்கினார். அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதில் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதியது. இந்த விபத்தில் சோலக் கொட்டாய் முனியப்பன் (42), சாலை விநாயகர் ரோடு ரோகினி (35), தேன்கனிக்கோட்டை நஞ்சுண்டன் (44), ராணி (55), பெரியகுப்பம் தங்கராஜ் (30), அதியமான் கோட்டை சுரேஷ் (21), காவேரிப்பட்டி சஞ்சை (16), உண்ணாமலை (50) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X