search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தருமபுரி அருகே லாரி மீது தனியார் பஸ் மோதல்- 8 பயணிகள் காயம்
    X

    தருமபுரி அருகே லாரி மீது தனியார் பஸ் மோதல்- 8 பயணிகள் காயம்

    தருமபுரி அருகே இன்று காலை லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இன்று காலை தருமபுரியை அடுத்த செல்லியம்பட்டி அருகே அந்த பஸ் சென்றுகொண்டிருந்தது. 

    இந்த பஸ்சை டிரைவர் சேகர் இயக்கினார். அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதில் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதியது. இந்த விபத்தில் சோலக் கொட்டாய் முனியப்பன் (42), சாலை விநாயகர் ரோடு ரோகினி (35), தேன்கனிக்கோட்டை நஞ்சுண்டன் (44), ராணி (55), பெரியகுப்பம் தங்கராஜ் (30), அதியமான் கோட்டை சுரேஷ் (21), காவேரிப்பட்டி சஞ்சை (16), உண்ணாமலை (50) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். 

    இவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.     
    Next Story
    ×