என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2018 4:13 PM GMT (Updated: 10 Sep 2018 4:13 PM GMT)
வேதாரண்யம் அருகே தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையன் அதே தெருவில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்கு முருகையன் சென்றுள்ளார். அப்போது அவர் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன் தனது வீட்டின் ஒரு அறையில் முருகையனை தங்க வைத்துள்ளார். அப்போது முருகையன் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையன் அதே தெருவில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்கு முருகையன் சென்றுள்ளார். அப்போது அவர் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன் தனது வீட்டின் ஒரு அறையில் முருகையனை தங்க வைத்துள்ளார். அப்போது முருகையன் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X