search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
    X

    வேதாரண்யம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    வேதாரண்யம் அருகே தொழிலாளி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை இலந்தையடி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் குடிப்பழக்கத்தை நிறுத்த மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகையன் அதே தெருவில் உள்ள பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்கு முருகையன் சென்றுள்ளார். அப்போது அவர் வெளியே செல்ல பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன் தனது வீட்டின் ஒரு அறையில் முருகையனை தங்க வைத்துள்ளார். அப்போது முருகையன் அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முருகையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×