search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி - தருமபுரியில் இன்று காலை மழை
    X

    கிருஷ்ணகிரி - தருமபுரியில் இன்று காலை மழை

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7மணி அளவில் திடீரென மழை பெய்ய துவங்கியது. இந்த மழையால் சாலையில், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

    இதையடுத்து பூமி குளிர்ச்சியடைந்து, வெப்ப காற்று தணிந்து, குளிர்காற்று வீச துவங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இன்று அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் லேசான தூறல் மழை இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில் 86.20 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. பாரூர் - 37.80 மி.மீ., போச்சம்பள்ளி - 20.40 மி.மீ., கிருஷ்ணகிரி - 10 மி.மீ., ஊத்தங்கரை - 1 மி.மீ., என மொத்த மழை அளவு 155.40 மி.மீ பதிவாகியிருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. ஒகேனக்கல் -பென்னாகரத்திலும் மழை பெய்து வருகிறது. தருமபுரி நகரில் இன்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த அவதிப்பட்டனர். மாலை நேரத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சுமார் 4 மணி நேரம் மிதமான மழை பெய்தது. மழையானது தற்போது காலைவரை நீடித்த நிலையில் காணப்பட்டது.

    இதனால் வானம் பார்த்து பூமியில் பயிரிடப்பட்ட மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு ஆகிய பயிர்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×