என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
Byமாலை மலர்10 Sep 2018 12:23 PM GMT (Updated: 10 Sep 2018 12:23 PM GMT)
திருமங்கலத்தில் பந்தை எடுக்கச் சென்றபோது மாணவன் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் ஆண்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கதிர்வேல் (வயது 9). 4-ம் வகுப்பு மாணவன்.
நேற்று கருப்பசாமி தனது மனைவியுடன் திருமங்கலத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்கு சென்றார். கதிர்வேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
வீட்டு முன்பு தோட்டத்தில் அவன் பந்து விளையாடி உள்ளான். எதிர்பாராத விதமாக பந்து அங்குள்ள கிணற்றுக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக கதிர்வேல் இறங்கி உள்ளான்.
அப்போது நிலை தடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய கதிர்வேல் பரிதாபமாக இறந்தான். வீடு திரும்பிய கருப்பசாமி மகனை தேடிய போது கிணற்றுக்குள் அவன் பினமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருமங்கலம் அருகே உள்ள புளியங்குளம் ஆண்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் கதிர்வேல் (வயது 9). 4-ம் வகுப்பு மாணவன்.
நேற்று கருப்பசாமி தனது மனைவியுடன் திருமங்கலத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்கு சென்றார். கதிர்வேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.
வீட்டு முன்பு தோட்டத்தில் அவன் பந்து விளையாடி உள்ளான். எதிர்பாராத விதமாக பந்து அங்குள்ள கிணற்றுக்குள் விழுந்தது. அதனை எடுப்பதற்காக கதிர்வேல் இறங்கி உள்ளான்.
அப்போது நிலை தடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனால் தண்ணீரில் மூழ்கிய கதிர்வேல் பரிதாபமாக இறந்தான். வீடு திரும்பிய கருப்பசாமி மகனை தேடிய போது கிணற்றுக்குள் அவன் பினமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X