search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
    X

    திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் தீ விபத்து

    திருச்செங்கோடு அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சித்தாளம்பூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் அந்த பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது வீட்டை சுற்றி புகை மண்டலமாக காட்சி அளித்ததால் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அவர் வீட்டின் மேற்கூறை தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார் ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவகுமார் மற்றும் குழுவினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பைக் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது. #tamilnews
    Next Story
    ×