என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் ஜோடி உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2018 11:49 AM GMT (Updated: 10 Sep 2018 11:49 AM GMT)
ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் ஜோடியின் பழக்கம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததை அடுத்து இருவரும் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி காலனியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 37). கூலி வேலை பார்த்து வருகிறார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அடுத்த சீரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). எலக்ட்ரீசியனாக இருந்தார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
ஜோதி வேலைக்கு செல்லும் இடத்தில் சுரோசும் மின்சாரம் பணி சம்பந்தமாக சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கள்ளக்காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இருவரது வீட்டிலும் விஷயம் தெரிந்ததால் அவமானமாக உள்ளது என்று புலம்பிய அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
அத்தாணி காலனி மாதேஸ்வரன் தோட்டத்துக்கு நேற்று இரவு கள்ளக்காதலர்கள் சென்றனர். அங்கு இருந்து மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து இருவரது உடலிலும் மின் சாரத்தை பாய்ச்சினர்.
இதில் இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
இன்று காலை தோட்டத்துக்கு வந்த தோட்டத்துக்காரர்கள் மேலும் அந்த வழியாக சென்றவர்களும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி காலனியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பெயர் ஜோதி (வயது 37). கூலி வேலை பார்த்து வருகிறார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை அடுத்த சீரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). எலக்ட்ரீசியனாக இருந்தார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
ஜோதி வேலைக்கு செல்லும் இடத்தில் சுரோசும் மின்சாரம் பணி சம்பந்தமாக சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரிய வந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் கள்ளக்காதலர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். இருவரது வீட்டிலும் விஷயம் தெரிந்ததால் அவமானமாக உள்ளது என்று புலம்பிய அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
அத்தாணி காலனி மாதேஸ்வரன் தோட்டத்துக்கு நேற்று இரவு கள்ளக்காதலர்கள் சென்றனர். அங்கு இருந்து மின் கம்பத்தில் கொக்கி மூலம் மின்சாரத்தை எடுத்து இருவரது உடலிலும் மின் சாரத்தை பாய்ச்சினர்.
இதில் இருவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.
இன்று காலை தோட்டத்துக்கு வந்த தோட்டத்துக்காரர்கள் மேலும் அந்த வழியாக சென்றவர்களும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X