search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
    X

    ஆத்தூர் பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு பல நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை சேலம்- சென்னை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது அவர்கள் தங்களுக்கு குநீர் வசதி செய்து கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறினர்.

    இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளை வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதேபோல் நேற்று மாலை மந்தைவெளி பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

    2 தினங்களுக்கு முன்பு 21-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், 10-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குடிநீர் வரவில்லை என்று கூறி தொடர் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதனால் ஆத்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். #tamilnews
    Next Story
    ×