என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்- 158 பேர் கைது
Byமாலை மலர்10 Sep 2018 11:01 AM GMT (Updated: 10 Sep 2018 11:01 AM GMT)
டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடந்தது.
இதையொட்டி சேலத்தில் கலெக்டர் அலுவகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு உள்பட பல கட்சிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டீசல், பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
அப்போதும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்ட 158 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையை குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். #tamilnews
டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடந்தது.
இதையொட்டி சேலத்தில் கலெக்டர் அலுவகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு உள்பட பல கட்சிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டீசல், பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
அப்போதும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்ட 158 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையை குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X