search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்- 158 பேர் கைது
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கேட்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்- 158 பேர் கைது

    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சேலம்:

    டீசல், பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடந்தது.

    இதையொட்டி சேலத்தில் கலெக்டர் அலுவகம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு உள்பட பல கட்சிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டீசல், பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

    அப்போதும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்ட 158 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் விலையை குறைக்காத மத்திய அரசு வெளிநாட்டுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். #tamilnews
    Next Story
    ×