search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியாஸ் விலை உயர்பு- விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடத்திய காங்கிரசார்
    X

    கியாஸ் விலை உயர்பு- விறகு அடுப்பு வைத்து சமைக்கும் போராட்டம் நடத்திய காங்கிரசார்

    பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர். #BharathBandh #PetrolDieselPriceHike

    புதுச்சேரி:

    பெட்ரோல் -டீசல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் ஆங்காங்கே மறியலிலும் ஈடுபட்டனர்.

    அதுபோல் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் ராமு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் பெட்ரோல் -டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்கள் நடுரோட்டில் விறகு அடுப்பை வைத்து சமையல் செய்தனர் மேலும் பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை எடுத்து காட்டும் வகையில் மாட்டு வண்டிகளில், மோட்டார் சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து அனந்தராமன் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக கொண்டு சென்றனர். #BharathBandh #PetrolDieselPriceHike

    Next Story
    ×