என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் தற்கொலை
Byமாலை மலர்10 Sep 2018 10:14 AM GMT (Updated: 10 Sep 2018 10:14 AM GMT)
சேலத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் பழைய சூரமங்கலம் புதுரோடு போடி நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 33). காஞ்சிபுரத்தில் போலீஸ் பயிற்சியை முடித்த இவர் கடந்த 2008-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
தற்போது புவனேஸ்வரி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவிலும் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் புதுரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கவுதமன் (வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது கவுதமன் பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு திருமணமான 4 மாதத்தில் புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புவனேஸ்வரி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்ட நேரம் ஆகியும் அந்த அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை செல்வராஜ் கதவை தட்டினார்.
ஆனாலும் எந்த சத்தமும் வரவில்லை. இதனால் பதறிய அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து புவனேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். அவரை பரி சோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனால் மகளின் உடலை பார்த்து தந்தை கதறி அழுதார்.
இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டு மூலம் புவனேஸ்வரிக்கு நோட்டீசு அனுப்பினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி நேற்று கணவர் கவுதமனை சந்தித்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமன் மறுத்துவிட்டார்.
இந்த மன வேதனையில் புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சேலம் மேற்கு உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ. குமரேசன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தற்போது புவனேஸ்வரி சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். மேலும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவிலும் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் புதுரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கவுதமன் (வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது கவுதமன் பெங்களூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சேலத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு திருமணமான 4 மாதத்தில் புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் புவனேஸ்வரி தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை நீண்ட நேரம் ஆகியும் அந்த அறையின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை செல்வராஜ் கதவை தட்டினார்.
ஆனாலும் எந்த சத்தமும் வரவில்லை. இதனால் பதறிய அவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து புவனேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். அவரை பரி சோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனால் மகளின் உடலை பார்த்து தந்தை கதறி அழுதார்.
இதுபற்றி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மிதுன்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதமன் விவாகரத்து கேட்டு கோர்ட்டு மூலம் புவனேஸ்வரிக்கு நோட்டீசு அனுப்பினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி நேற்று கணவர் கவுதமனை சந்தித்து இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் அதற்கு கவுதமன் மறுத்துவிட்டார்.
இந்த மன வேதனையில் புவனேஸ்வரி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சேலம் மேற்கு உதவி கமிஷனர் செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ. குமரேசன் ஆகியோர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X