என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி - தொழிலாளிக்கு வலைவீச்சு
Byமாலை மலர்10 Sep 2018 9:25 AM GMT (Updated: 10 Sep 2018 9:25 AM GMT)
உடுமலை அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிப்புள்ள பெண்ணை கற்பழிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை அடுத்துள்ள உடுக்கம் பாளையத்தில் 30 வயது பெண் ஒருவர் திருமணம் ஆகாமல் தனது பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தந்தை தளி போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யாசாமி, சக்திவேல், போலீஸ்காரர்கள் அனுமந்தன், கருப்புசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவான முருகனை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறியதாவது-
எனது மகள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று எனது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார்.
நான் பக்கத்து தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றுவிட்டேன். எனது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகன் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்தேன். அதிர்ச்சி அடைந்த நான் முருகனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடுமலை அடுத்துள்ள உடுக்கம் பாளையத்தில் 30 வயது பெண் ஒருவர் திருமணம் ஆகாமல் தனது பெற்றோர் பராமரிப்பில் இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று அப்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (38) அப்பெண்ணை கற்பழிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண்ணின் தந்தை தளி போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க உடுமலை டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யாசாமி, சக்திவேல், போலீஸ்காரர்கள் அனுமந்தன், கருப்புசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தலைமறைவான முருகனை தேடி வருகிறார்கள்.
இது குறித்து அப்பெண்ணின் தந்தை கூறியதாவது-
எனது மகள் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டார். சம்பவத்தன்று எனது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார்.
நான் பக்கத்து தெருவில் உள்ள நண்பரை பார்க்க சென்றுவிட்டேன். எனது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முருகன் எனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அங்கு வந்தேன். அதிர்ச்சி அடைந்த நான் முருகனை பிடிக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X