search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்- காஞ்சீபுரம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
    X

    அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்- காஞ்சீபுரம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பது என்று மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா நடக்கிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சின்ன காஞ்சீபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து அதிமுக கொடியேற்றுகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிகாக கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கத்தினை திறந்து வைக்கிறார். மாலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும். முதல்வருக்கு காஞ்சீபுரம் நகர எல்லையில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் பெஞ்சமின், அமைப்புச் செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அக்ரி நாகராஜன், குண்ண வாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாணிக்கம், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×