search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்- ராஜன் செல்லப்பா அறிக்கை
    X

    அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்- ராஜன் செல்லப்பா அறிக்கை

    திருப்பரங்குன்றத்தில் நாளை அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடக்கிறது என்று ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மாவின் நல்லாசியுடன், துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள 95, 96 ஆகிய வார்டு களின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் உள்ள மரகதம் மகாலில் எனது தலைமையில் நடைபெறுகிறது

    மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், பகுதி செயலாளர்கள் பன்னீர்செல்வம், முனி யாண்டி, பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் நிலை யூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட் டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ ஆகியோர் ஆலோசனை வழங்குகின்றனர்.

    நிகழச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, பெரியபுள்ளான் (எ) செல்வம், மாணிக்கம், சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் செயல்வீரர்களும், செயல்வீரங்கனைகளும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×