
காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 28). இவர் பழைய மரங்கள், இரும்பு பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தனது தொழில் தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்கிடையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தவித்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.