search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வீட்டு தகராறில் கணவன்- மனைவியை தாக்கிய கும்பல்
    X

    தேனி அருகே வீட்டு தகராறில் கணவன்- மனைவியை தாக்கிய கும்பல்

    தேனி அருகே கணவன்- மனைவியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டிபட்டி மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ். இவரது மனைவி துர்காதேவி (வயது 25). அதே வீட்டில் 2 மாதத்துக்கு முன்பு கலையரசன் (43) என்பவர் 3 ஆண்டு ஒத்திக்கு வீட்டை எடுத்து அவரது மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    பாக்கியராஜ் மற்றும் கலையரசன் குடும்பத்தினரிடையே மோட்டார் இயக்குவது மற்றும் இ.பி. பில் கட்டுவதில் 2 மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சினை முன் விரோதமாக மாறி பாக்கியராஜ், கலையரசன் குடும்பத்தினரை வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இந்த முன் விரோதம் கைகலப்பாக மாறியது.

    சம்பவத்தன்று இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கலையரசன் அவரது மனைவி மற்றும் மகன்கள் துர்காதேவியை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பாக்கியராஜூம் தாக்கப்பட்டார்.

    இதில் காயமடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து துர்காதேவி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் கலையரசன், அவரது மனைவி மற்றும் மகன்கள் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×