என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசுடன் சேர்ந்து அதிமுக அரசை கவிழ்க்க திமுக சதி - தம்பிதுரை
Byமாலை மலர்9 Sep 2018 6:33 AM GMT (Updated: 9 Sep 2018 2:17 PM GMT)
மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருவதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #dmk #admk
கரூர்:
பழைய ஜெயங்கொண்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி.மு.க. கண்டிக்கிறது. பா.ஜ.க. அரசின் கையாலாகாத தனமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்.
முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.-பா.ஜ.க. ரகசிய உடன்பாடு உறவு வைத்து வருகிறது. இதனால் இருவரும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகின்றனர். குட்கா விவகாரத்தில் தேவையில்லாமல் அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
சி.பி.ஐ., வருமான வரி சோதனை என எந்த அச்சுறுத்தல்களுக்கும் அ.தி.மு.க. அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தி.மு.க.வுடன் கூட்டணி சேர தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருகிறது.
கேள்வி:- ஜெயலலிதா இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாக அமைச்சர்களை நீக்கி விடுவாரே?
ப: ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடு வேறு. தற்போது உள்ளவர்களின் ஆட்சி நிலைப்பாடு வேறு.
கே: குட்கா ஊழல் விசாரணையில் ஜார்ஜ் ஊழல் நடந்தது உண்மை, என்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டனர் என கூறியுள்ளாரே?
ப: ஜார்ஜ், பதவியில் இருக்கும் போது சொல்லி இருக்கலாமே? இப்போது, கடிதம் எழுதியிருந்தேன் என கூறுவதை ஏற்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #dmk #admk #centralgovernment
பழைய ஜெயங்கொண்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசின் செயல்பாட்டை அ.தி.மு.க. கண்டிக்கிறது. பா.ஜ.க. அரசின் கையாலாகாத தனமே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்.
முந்தைய காங்கிரஸ் அரசு, தற்போதைய பா.ஜ.க. அரசின் தவறான கொள்கையால் தான் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு தி.மு.க.-பா.ஜ.க. ரகசிய உடன்பாடு உறவு வைத்து வருகிறது. இதனால் இருவரும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகின்றனர். குட்கா விவகாரத்தில் தேவையில்லாமல் அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டும் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
சி.பி.ஐ., வருமான வரி சோதனை என எந்த அச்சுறுத்தல்களுக்கும் அ.தி.மு.க. அரசு பயப்படாது. ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சோதனை நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தி.மு.க.வுடன் கூட்டணி சேர தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க தி.மு.க. சதி திட்டம் தீட்டி வருகிறது.
கேள்வி:- ஜெயலலிதா இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் தவறு செய்தால் உடனடியாக அமைச்சர்களை நீக்கி விடுவாரே?
ப: ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் நிலைப்பாடு வேறு. தற்போது உள்ளவர்களின் ஆட்சி நிலைப்பாடு வேறு.
கே: குட்கா ஊழல் விசாரணையில் ஜார்ஜ் ஊழல் நடந்தது உண்மை, என்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டனர் என கூறியுள்ளாரே?
ப: ஜார்ஜ், பதவியில் இருக்கும் போது சொல்லி இருக்கலாமே? இப்போது, கடிதம் எழுதியிருந்தேன் என கூறுவதை ஏற்க முடியுமா?
இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #dmk #admk #centralgovernment
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X