என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை - நாராயணசாமி
Byமாலை மலர்9 Sep 2018 4:48 AM GMT (Updated: 9 Sep 2018 4:48 AM GMT)
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.#RajivGandhi
புதுச்சேரி:
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.
பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் நல்ல பாடத்தை தருவார்கள். கண்டிப்பாக மாற்றம் வரும்.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடைப்பெற உள்ளது. இந்த போராட்டம் வெற்றிகரமாக அமையும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
அவரிடம், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேருடைய விடுதலைக்கான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை? ஆனால், அதிக நாட்கள் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால் தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை” என்று கூறினார். #RajivGandhi
சென்னை விமான நிலையத்தில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.
பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதற்கு மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாட்டு மக்கள் பா.ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் நல்ல பாடத்தை தருவார்கள். கண்டிப்பாக மாற்றம் வரும்.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடைப்பெற உள்ளது. இந்த போராட்டம் வெற்றிகரமாக அமையும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
அவரிடம், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேருடைய விடுதலைக்கான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எப்படி பார்க்கின்றீர்கள்? என்ற கேள்விக்கு “காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை? ஆனால், அதிக நாட்கள் குற்றவாளிகள் சிறையில் இருந்ததால் தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை செய்வதில் தவறு இல்லை” என்று கூறினார். #RajivGandhi
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X