search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது - செங்கோட்டையன்
    X

    இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது - செங்கோட்டையன்

    சென்னையில் இன்று மாலை நடக்கும் அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Sengottaiyan #RajivGandhimurdercase

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள பி.கே.ஆர்.மகளிர் கல்லூரியில் இன்று காலை பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடந்தது.

    ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள், சிறுமிகள் என தனி தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.

    போட்டியை தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது.-

    இது போன்ற விளையாட்டு போட்டிகள் மூலம் உடல் மற்றும் மணதை வலிமைப்படுத்த முடியும். ஒழுக்கம், பண்பு, உயர்வு பெறும். சிறந்த கல்வியாளராக உருவாக முடியும்.

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.


    சமூக சேவை நிறுவனம் சார்பில் 20 அரசு பள்ளிகளில் முதல் கட்டமாக வாகனம் மூலம் கழிவறை சுத்தம் செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்தில் பரிட்சாத்த முறையில் சோதனை மேற் கொள்ளப்படும்.

    வரும் கல்வி ஆண்டில் 600 அரசு பள்ளிகளில் ரூ.20 லட்சம் செலவில் “அடல் லேப்” திட்டம் தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழக கல்வித்துறை முன் மாதிரியாக செயல்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே எலத்தூர் அரசு பள்ளியில் கழிவறையை மாணவர்கள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தாராபுரத்திலும் இது போல் சம்பவம் நடந்துள்ளது.

    எலத்தூரில் நடந்துள்ள இந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியை மாற்றம் செய்யப்படுவார்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    நிகழ்ச்சியில் சத்தியபாமா எம்.பி, கல்லூரி முதல்வர் ஜெகதாலட்சுமணன், செயலாளர் வெங்கடாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Sengottaiyan #RajivGandhimurdercase

    Next Story
    ×