search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதராப்பட்டில் தனியார் நிறுவன காவலாளியிடம் செல்போன் பறிப்பு
    X

    சேதராப்பட்டில் தனியார் நிறுவன காவலாளியிடம் செல்போன் பறிப்பு

    சேதராப்பட்டில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தனியார் நிறுவன காவலாளியிடம் செல்போனை பறித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்சாகு (வயது20). இவர் சேதராப்பட்டில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணியளவில் சஞ்சய்குமார்சாகு பணிமுடித்து தான் தங்கி இருக்கும் வீட்டுக்கு சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    செல்போனில் பேசியபடியே வந்த போது பின்னால் ஒரே மோட்டார் சைக்களில் வந்த 3 பேர் திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி சஞ்சய்குமார்சாகுவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    செல்போனை பறிகொடுத்த சஞ்சய்குமார்சாகு சேதராப்பட்டு போலீசில் புகார்  செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து செல்போனை பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகிறார்.

    Next Story
    ×