search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பனஹள்ளி பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யும் பணி
    X

    வேப்பனஹள்ளி பகுதியில் கால்வாய் சுத்தம் செய்யும் பணி

    வேப்பனஹள்ளி பகுதியில் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியை அந்த பகுதி பொதுமக்கள் மக்கள் பாராட்டினார்கள்.
    வேப்பன ஹள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனபள்ளி காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராம பகுதியில் உத்தனபள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு தலைமையில் உத்தனபள்ளி சுற்று வட்டார கிராமங்களில் பல்வேறு சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.

    ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் தொடர் விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வேகத்தடை அமைத்தல் போன்ற சேவைகளை போலீசார் செய்து வருகின்றனர். போலீஸ் நிலையம் சுற்று சுவர் அமைத்தல் மற்றும் தற்போது உத்ததனபள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் இல்லாமல் வீதிகளில் சென்று தேங்கிய நிலையில் இருந்தது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்பட்டது. அந்த கழிவு நீர் கால்வாயை போலீசாரின் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரி சுத்தம் செய்யப்படும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×