search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொப்பம்பட்டி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் - 3 பேர் கைது
    X

    தொப்பம்பட்டி அருகே மணல் கடத்திய லாரிகள் பறிமுதல் - 3 பேர் கைது

    தொப்பம்பட்டி அருகே அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    க.பரமத்தி:

    தென்னிலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் நேற்று தொப்பம்பட்டி என்ற இடத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த தினேஷ்(வயது 30) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி ஆகியோர் க.பரமத்தி அருகே உள்ள குளத்துப் பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரி டிரைவர் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த மோகன்(24) மற்றும் லாரியில் இருந்த திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த முருகேசன்(40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×