search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு
    X

    ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு

    சேலத்தில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பக்கத்தில் இருந்த நபர் பறித்து சென்றார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், பொன்னம்மாப்பேட்டை, கோபால் செட்டிதெருவை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 72). இவர், நேற்று முன்தினம் சேலம் டவுன் ஆனந்தா இறக்கம் பகுதியில் சேலம் நோக்கி ஷேர் ஆட்டோவில் சென்றார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. 

    ஆட்டோவில் வந்த போது பக்கத்தில் இருந்த நபர் நகையை திருடியது தெரியவந்தது. இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×