search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி அருகே திருமணம் ஆன 1 வருடத்தில் இளம்பெண் மரணம்
    X

    தர்மபுரி அருகே திருமணம் ஆன 1 வருடத்தில் இளம்பெண் மரணம்

    தர்மபுரி அருகே திருமணம் ஆன 1 வருடத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவதிப்பட்டு வந்த இளம்பெண் மரணமடைந்தார்.
    கொண்டலாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம், மொரப்பூர், சென்னாம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மீனா (வயது 22). இவர்களுக்கு திருமணம் நடந்து 1 வருடங்கள் ஆகிறது. இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி அருகே தங்கியிருந்து கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 6-ந்தேதி அன்று மாலை மீனாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே மீனா அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனா பரிதாபமாக இறந்தார். 

    திருமணம் நடந்து 1 வருடங்களே ஆவதால் சேலம் தெற்கு உதவி கமிஷனர் கணேசன் மற்றும் உதவி கலெக்டர் குமரேசன் ஆகியோர் இளம்பெண் மீனா சாவு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×