search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் டயர் வெடித்ததால் 2 பேர் காயம்
    X

    சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் டயர் வெடித்ததால் 2 பேர் காயம்

    சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் 2 பேர் காயம் அடைந்தனர். சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.



    ஸ்ரீமுஷ்ணம்:

    விருத்தாசலத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். சோழத்தரம் அருகே மாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் பஸ்சில் உள்ள தகடு பெயர்ந்து பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த 2 பயணிகள் மீது விழுந்தது. அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.

    தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×