என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் டயர் வெடித்ததால் 2 பேர் காயம்
Byமாலை மலர்8 Sep 2018 1:44 PM GMT (Updated: 8 Sep 2018 1:44 PM GMT)
சோழத்தரம் அருகே ஓடும் பஸ்சில் பின் பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் 2 பேர் காயம் அடைந்தனர். சக பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.
ஸ்ரீமுஷ்ணம்:
விருத்தாசலத்தில் இருந்து காட்டுமன்னார்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். சோழத்தரம் அருகே மாமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் பஸ்சில் உள்ள தகடு பெயர்ந்து பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த 2 பயணிகள் மீது விழுந்தது. அவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கினர்.
தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X