என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காந்தி கிராம பல்கலை கழகத்துக்கு மத்திய அரசு ரூ. 9.50 கோடி ஒதுக்கீடு
Byமாலை மலர்8 Sep 2018 11:46 AM GMT (Updated: 8 Sep 2018 11:46 AM GMT)
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க காந்தி கிராம பல்கலை கழகத்துக்கு மத்திய அரசு ரூ. 9.50 கோடி ஒதுக்கி உள்ளது.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் இயங்கும் மதன் மோகன் மாளவிகா மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வியில் உயர்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் உயர்கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், கருத்தரங்கம், பயிற்சி பட்டறை உள்ளிட்ட வடிவங்களில் ஒரு பயிற்சி 40 ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டிற்கு 3 பயிற்சியில் 120 ஆசிரியர்கள் பயிற்சி பெறுவார்கள். இவ்வாறு 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 2 கோடி வீதம் 4 கோடி ரூபாயும், பயிற்சிக்கான வகுப்பறை, கருத்தரங்க கூடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறை ஒதுக்கி உள்ளது. இந்த பயிற்சியின் தலைவராக பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஷாகிதா பேகம், ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஸ்ரீதேவி செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் இயங்கும் மதன் மோகன் மாளவிகா மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வியில் உயர்கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய அளவில் உயர்கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், கருத்தரங்கம், பயிற்சி பட்டறை உள்ளிட்ட வடிவங்களில் ஒரு பயிற்சி 40 ஆசிரியர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். ஆண்டிற்கு 3 பயிற்சியில் 120 ஆசிரியர்கள் பயிற்சி பெறுவார்கள். இவ்வாறு 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 2 கோடி வீதம் 4 கோடி ரூபாயும், பயிற்சிக்கான வகுப்பறை, கருத்தரங்க கூடம் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்கு ரூ. 5 கோடியே 50 லட்சம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறை ஒதுக்கி உள்ளது. இந்த பயிற்சியின் தலைவராக பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஷாகிதா பேகம், ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் ஸ்ரீதேவி செயல்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X