search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளத்தில் பள்ளி மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது
    X

    பெரியகுளத்தில் பள்ளி மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் கைது

    பெரியகுளத்தில் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    தேனி:

    பெரியகுளம் வடகரை தெற்கு பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகன் அருண் பிரபாகரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று வடகரையைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தபோது கேலி செய்தார்.

    மேலும் அவரது துப்பட்டாவை பிடித்து இழுத்து அவரது முகத்தை மூடி சில்மி‌ஷம் செய்தார். இதை பர்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சத்தம் போட்டனர். இதனால் மாணவியை திட்டி விட்டு வாலிபர் ஓடி விட்டார்.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த அருண் பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    Next Story
    ×