search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே வாகன விபத்தில் மூதாட்டி பலி
    X

    ஆம்பூர் அருகே வாகன விபத்தில் மூதாட்டி பலி

    ஆம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 70)இன்று அதிகாலை விண்ணமங்கலம் தேசிய நெஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×