என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சக்கரம் மாற்றியபோது லாரி சாய்ந்து வேலூர் டிரைவர் நசுங்கி பலி
தண்டராம்பட்டு:
வேலூர் சாயிநாதபுரத்தை சேர்ந்தவர் புகழேந்தி மகன் தமிழேந்தி (வயது 35). லாரி டிரைவர். நேற்று மதியம் 1 மணியளவில் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி மினி லாரியில் சென்று கொண்டிருந்தார்.
கொளக்குடி அருகே சென்ற போது மினி லாரியின் பின்பக்க சக்கரம் வெடித்தது. இதனையடுத்து சக்கரத்தை மாற்றும் பணியில் தமிழேந்தி ஈடுபட்டார்.
அப்போது வாகனத்தின் பின் பகுதியில் ஜாக்கி வைத்து வாகனத்தை மேலே தூக்கிய போது மினி லாரி தமிழேந்தி மீது சாய்ந்தது. இதில் உடல் நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழேந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அவரது மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்