search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்காரப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை
    X

    சிங்காரப்பேட்டை அருகே விவசாயி தற்கொலை

    சிங்காரப்பேட்டை அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த நார்த்தாம்பட்டியை சேர்ந்தவர் பொன்னன் (வயது 50), விவசாயி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வீட்டில் இருந்த பூச்சுக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×