search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் வேன் மீது தனியார் பஸ் மோதியதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்
    X

    போலீஸ் வேன் மீது தனியார் பஸ் மோதியதில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்

    சூலூர் அருகே போலீஸ் வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    சூலூர்:

    திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் கோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலரை விசாரணைக்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேனில் புறப்பட்டனர்.

    போலீஸ்காரர் அஸ்தீன் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் திருப்பூர் ஆயுதப்படை போலீசார் மனோஜ்குமார், தட்சிணாமூர்த்தி மற்றும் தெற்கு மகளிர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி ஆகியோர் வாகனத்தில் வந்தனர்.

    வேன் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் வந்தபோது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக போலீஸ் வேனின் பின் பக்கமாக மோதியது.இதில் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, மற்றும் போலீஸ் காரர்கள் தட்சிணாமூர்த்தி, மனோஜ்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீஸ்காரர் அஸ்தீன் சூலூர் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் பஸ் டிரைவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவரை பஸ்சுடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். #tamilnews
    Next Story
    ×