search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்
    X

    மஞ்சூரில் இருந்து கோவை வந்த அரசு பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு வந்த அரசு பஸ்சை யானை கூட்டம் ரோட்டின் குறுக்கே வந்து வழிமறித்தது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    பஸ் 8-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது காட்டுக்குள் இருந்து யானைகள் கூட்டமாக வந்து ரோட்டின் குறுக்கே வந்து பஸ்சை வழிமறித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் காட்டு யானை கூட்டம் தானாகவே அங்கு இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகு பஸ் கோவைக்கு புறப்பட்டு வந்தது.

    கோத்தகிரி அருகே உள்ள மூன்றுரோடு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று 7 வயது மதிக்கக்தக்க ஆண் காட்டுயானை வழித்தவறி நுழைந்தது. அந்த காட்டுயானை எங்கு செல்வது என்று தெரியாமல் ரோடு மற்றும் தேயிலை தோட்டங்களில் அங்கும் இங்குமாக அழைந்து கொண்டு இருந்தது.

    பின்னர் தேயிலைத் தோட்டத்தில் புதருக்குள் பதுக்கி கொண்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து யானை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட முயற்சி மேற்கொண்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×