search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- காதர்மொகிதீன்
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- காதர்மொகிதீன்

    ஓரின சேர்க்கை பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொகிதீன் வலியுறுத்தியுள்ளார். #KaderMohideen
    ஸ்ரீமுஷ்ணம்:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான காதர்மொகிதீன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஓரின சேர்க்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு பண்பாட்டுக்கு எதிரானது.

    இந்த தீர்ப்பை இந்திய மக்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த தீர்ப்பை மற்ற 31 அமர்வு நீதிபதிகள் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்க வேண்டும்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

    தி.மு.க.வில் பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் பராம்பரிய தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

    மு.க.அழகிரி தன் தந்தைக்கு கடமை செய்வதற்காக அமைதி பேரணி நடத்தியுள்ளார். இதனால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

    சுதந்திர இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் தனி மனிதன் விமர்சனம் செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய வி‌ஷயமாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மாணவி சோபியாவை கைது செய்ததை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KaderMohideen
    Next Story
    ×